×

சேலம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பறிமுதல்..!!

சேலம்: ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஜெயம் பிளாஸ்டிக் குடோனில் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆத்தூர் நகராட்சி ஆணையர் ஷாலினி தலைமையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 10 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயம் பிளாஸ்டிக் குடோன் உரிமையாளர் ஜெகதீஸ்வரனிடம் இருந்து ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

The post சேலம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Jayam ,Attur ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க தடை!